"வட்டியென வயதுனக்கு வளர்ந்தாலும் இளவயதுக்
குட்டியென எந்நாளும் குதிக்கின்ற செந்தமிழே!
ஆசைக் கிளியே! ஆயிரம்பேர் பார்த்திருக்க
ஓசையுடன் உடல்தழுவி உள்ளத்திற் கலப்பவளே!
கம்பனிடம் கைகட்டிக் கபிலனிடம் வாய்பொத்தி
நம்கண்ண தாசன் நடையழகில் விழிசொக்கி
எம்பிக் குதித்தவளே! ஏவல்களைச் செய்தவளே!
தம்பி என்னுடனும் சதிராட வந்திடுக!"